Friday 4 May, 2012

காலங்கள் கடந்து வாழும் அது...


மண்ணில் சிறை பட்ட மண்புழுவும் 
மேல் எழுந்து மெல்ல நடந்த நேரம் அது!
விண்ணில் பல மாற்றங்கள்..
உன் எண்ணங்களிலும் தான்!
கண்கள் கலங்காமல் இருக்க 
கண்ணயர்ந்தது போல நடிக்கும் என்னிடம்..
காதல் இல்லை என்றாமல்,
காலம் உன்னை மாற்றிடும் என்று சொல்லி
மெல்ல நகர்ந்தாயே... 
உன் மௌனம் ரசித்த எனக்கு
உன் தூரம் புதிதல்ல என்பதை மறந்தாயோ?